/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்
/
டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்
ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: உப்புபாளையம் பிரிவு பகுதியில், டூவீலரில் வேகமாக சென்றவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.புகழூர் அருகே காளிபாளையம் பூலாம் காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் சிதம்பரநாத், 47.
இவர் நேற்று முன்தினம் இரவு, ஈரோடு - கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் உப்புபாளையம் பிரிவு அருகே வந்தபோது, வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் சிதம்பரநாத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உட-னடியாக அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அனுமதித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

