/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED : ஜன 13, 2025 03:29 AM
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசனத்தை-யொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த, 4ல் திருவெம்பாவை, அபிஷேகம் மற்றும் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், நடராஜ மூர்த்திக்கு திருவெம்-பாவை பாடுதல் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.இன்று அதி-காலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், மதியம், 3:00 மணிக்கு கோவில் முன், சித்சபா பிரவேசம் என்ற, மட்டையடி திருவிழாவும் நடக்கிறது.