sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு

/

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு


ADDED : டிச 03, 2024 02:05 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புலியூர் - வீரராக்கியம் சாலையில்

மின் விளக்கு இல்லாததால் இருட்டு

கரூர், டிச. 2-

கரூரில் இருந்து சுங்ககேட், காந்தி கிராமம், புலியூர் வழியாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று, வீரராக்கியத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன. இதனால், சுங்ககேட் முதல் வீரராக்கியம் தேசிய நெடுஞ்சாலை வரை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக, சுங்ககேட் முதல், புலியூர் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதில், காந்தி கிராமம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின் கம்பங்கள், விளக்குகள் போடப்பட்டன. இதையடுத்து, புலியூர் முதல் வீரராக்கியம் வரையிலும், தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவுபெற்று, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை.

இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புலியூர் - வீரராக்கியம் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us