ADDED : ஆக 14, 2025 02:10 AM
அ நிறம் | அளவு
கரூர், கடவூர் சோனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், திருவள்ளுவர் மூங்கில் மன்றம் சார்பில், திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
அதில், பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் தெளிவுரை புத்தகங்களை அக்குபஞ்சர் மருத்துவர் சரவணன் வழங்கினார். பிறகு, பள்ளி மாணவ, மாணவியருக்கு மூங்கில் பல் துலக்கி வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திக், ஆசிரியர்கள் ரம்யா, பொன்னுசாமி, ராமலிங்கம் உள்பட, பலர் பங்கேற்றனர்.
