sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தான்தோன்றிமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் எச்சரிக்கை

/

தான்தோன்றிமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் எச்சரிக்கை

தான்தோன்றிமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் எச்சரிக்கை

தான்தோன்றிமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் எச்சரிக்கை


ADDED : நவ 09, 2025 03:06 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''கரூர் தான்தோன்றிமலை கோவிலுக்கு சொந்தமான, 600 ஏக்கர் நிலங்களை, பொதுமக்கள் வாங்கி ஏமாற வேண்டாம்,'' என, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அதில், கோவிலுக்கு சொந்தமான, 12 ஏக்கர் இனாம் நிலத்தை, ஏமூர் பகுதியில் மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் கண்காணிப்பாளர் பிரவீனா உடனிருந்தார்.

இதுகுறித்து, பின்னர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கடந்த, 2012 முதல் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, தெளிவாக சொல்லி வருகிறேன். அரசியல் செல்வாக்கு காரணமாக, ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்கள், கோவில் நிலங்களை அபகரிப்பு செய்கின்றன.

பின், அப்பாவி மக்களிடம் மூளை சலவை செய்து, 'பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்லி, மனைகளை விற்று வருகின்றனர்.

இதனால், 120 ஆண்டுகளுக்குரிய பத்திரப்பதிவு, வருவாய்துறை ஆவணங்களை ஒப்பிட்டு, கோவிலுக்கு சொந்தமான இடங்களை அடையாளம் காண வேண்டும் என, அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இனியாவது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இனாம் பதிவேட்டு ஆவணங்களை ஆய்வு செய்து, கோவில் பெயர்களில் இருக்கும் நிலங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு பல்வேறு பூஜை காரியங்கள் மற்றும் சேவை இனங்களுக்கு, தான்தோன்றிமலை, ஏமூர் உட்பட பல்வேறு பகுதிகளில், 600 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலங்களை, கோவில் தரப்புக்கு எந்தவிதமான வாய்ப்பு வழங்காமலும், தன்னிச்சையாகவும் சட்ட விரோதமாக தனி நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின், நிலங்களை மீண்டும் கோவில் பெயரில் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், நம் ஆட்சியாளர்களால் கோவில் நிலங்கள் காப்பாற்றப்படவில்லை. இதுவரை, 5 சதவீதம் இடங்கள் கூட மீட்கப்படவில்லை.

இனிவரும் காலங்களில், அரசியல் பலத்தை மீறி கோவில் இடங்கள் கண்டிப்பாக மீட்கப்படும். இப்பகுதியில், 120 ஆண்டுகளுக்குரிய பதிவுத்துறை வில்லங்க சான்றிதழ், வருவாய், நில அளவை துறையின் ஆவணங்களை ஆராயாமல், மக்கள் இடம் வாங்கி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us