பால் வியாபாரி வீட்டில் திருட்டு சிக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
பால் வியாபாரி வீட்டில் திருட்டு சிக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
UPDATED : மார் 15, 2026 08:27 AM
ADDED : மார் 15, 2026 08:26 AM

குளித்தலை:பால்
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 13 பவுன் நகை திருடிய வழக்கில்,
கைரேகையை வைத்து, மூன்று பேரை பிடித்த போலீசார் கைது செய்தனர்.
கரூர்
மாவட்டம், குளித்தலை அடுத்த பழைய ஜெயங்-கொண்டம் டவுன் பஞ்.,
வெள்ளையநாயக்கர் களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 70; பால்
வியாபாரி.
இவரது மனைவி பூங்கோதை, 65. கடந்த, 11ல் இவரது
வீட்-டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்து, 12
பவுன் நகை, 5 செட் வெள்ளி கொழுசு, 2,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை
திருடி சென்றனர்.
![]() |
![]() |
வழக்குப்பதிந்த லாலாப்பேட்டை போலீசார்,
கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், திருச்சி மாவட்டம்,
தாத்தையங்கார்பேட்டை, சிங்காரசோலை பகுதியை சேர்ந்த பார-திராஜா
என்பவரின் கைரேகை என்பது தெரியவந்தது.திருப்பூரில் தலைமறைவாக
இருந்த பாரதிராஜாவை பிடித்து நடத்திய விசாரணையில், திருட்டில்
தொடர்புடைய சேங்கல் பகுதியை சேர்ந்த அருண்குமார், 24, ஈரோடு மாவட்டம்,
சத்திய-மங்கலம் பகுதியை சேர்ந்த தங்கதுரை, 35, என்பது
தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், 8 பவுன் நகைகளை
மீட்-டனர்.
தொடர்ந்து, மூவரையும் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


