ADDED : நவ 22, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில்
முப்பெரும் விழா
கரூர், நவ. 22-
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி தலைமை வகித்தார்.
இங்கு, முதல் பருவத்தில் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களை பாராட்டி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் சான்றிதழ் வழங்கினார். குறுவள, வட்டார, மாவட்ட அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் பரிசு வழங்கினார்.
விழாவில், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பூங்கோதை உள்பட பலர் பங்கேற்றனர்.