ADDED : செப் 11, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 44,
விவசாயி. இவர் புன்னம்சத்திரத்தறிற்கு பைக்கில் நேற்று சென்று கொண்டு
இருந்தார்.
அப்போது, ஓலப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் நின்றார்.
அவருக்கு பின்னால், இரண்டு மோட்டார் பைக்கில் வந்த மூன்று வாலிபர்களில்
ஒருவர், ரவியின் கழுத்தை இறுக்கமாக பிடித்து கொண்டார். மற்ற இருவரும், ரவி
அணிந்திருந்த முக்கால் பவுன் மோதிரத்தை கழற்றினர். அப்போது சத்தம்
கேட்டதால், அங்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இருந்தபோதும்,
மோதிரத்தை பறித்து கொண்டு மூவரும் தப்பினர்.
இது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
