/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூதாட்டியிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு
/
மூதாட்டியிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு
ADDED : ஆக 08, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் அருகே செம்படாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மரகதம், 69. இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த, 30 வயது வாலிபர் கதவைத் தட்டி உள்ளார். மரகதம் கதவை திறந்துள்ளார். திடீரென வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.