/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 13 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு
/
கரூர் மாவட்டத்தில் 13 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு
கரூர் மாவட்டத்தில் 13 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு
கரூர் மாவட்டத்தில் 13 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு
ADDED : ஜூன் 11, 2025 02:25 AM
கரூர், மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு, 13 மையங்களில் வரும், 15ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்-, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும், 15ல் நடக்கிறது. இங்கு, 13 மையங்களில் மொத்தம், 2,894 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள, தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு நாளன்று காலை, 9:00 மணிக்கு மேல் மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும். தங்கள் போட்டோ அடையாளத்திற்கான, ஏதாவது ஒரு அட்டையை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். பென்சில், ரப்பர், மொபைல், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு பொருட்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. இவ்வாறு, கூறியுள்ளார்.