/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு 20 முதல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு 20 முதல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு 20 முதல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு 20 முதல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
ADDED : நவ 17, 2025 04:03 AM
கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்பு, வரும், 20 முதல் தொடங்கும் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர், வெண்ணைம-லையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்-நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ ஆகியவற்றுக்கு முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும், 20 முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில், ஸ்மார்ட் போர்டு, நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்-தோறும் சிறுதேர்வு, வாராந்திர தேர்வுகள், இணைய வழித்தேர்-வுகள், முழு மாதிரி தேர்வுகள், கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அலுவலகத்திற்கு நேரில் வருகைபுரிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 9499055912 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

