/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று ஆடிப்பெருக்கு: பூக்கள் விலை உயர்வு
/
இன்று ஆடிப்பெருக்கு: பூக்கள் விலை உயர்வு
ADDED : ஆக 03, 2025 01:09 AM
கரூர்,ஆடிப்பெருக்கையொட்டி, பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று, ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதனால், நீர் நிலைகளில் பொதுமக்கள், புனித நீராடி கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதையடுத்து, கரூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று காலை, பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ, 600 ரூபாய் வரை விற்றது. நேற்று, 900 ரூபாய்க்கு விலை போனது. முல்லை பூ, 300 ரூபாயில் இருந்து, 450 ரூபாய், அரளி, 200 ரூபாயில் இருந்து, 250, ரோஜா, 200 ரூபாயில் இருந்து, 300, சம்பங்கி, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய்க்கு விற்றது. துளசி, 4 கட்டு, 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு, 150 ரூபாய்க்கும் விற்றது.