நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர், தான்-தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நாளை, மஹா கும் பாபி ேஷகம் நடக்க உள்ளது. இதனால், நாளை கரூர் வட்டத்-துக்கு மட்டும், உள்ளூர் விடுமுறை அளிக்கப்படு-கிறது. நாளை அரசு தேர்வுகள் அறிவிக்கப்பட்டி-ருந்தால், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்-களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், இது பொது விடுமுறை நாள் இல்லை. மேலும், மாவட்ட கரு-வூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் பிப்., 7ம் தேதி சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, செய்திக்-குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

