/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை பொங்கல் பண்டிகை பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
/
நாளை பொங்கல் பண்டிகை பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
ADDED : ஜன 13, 2025 03:31 AM
கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர், தொழிலா-ளர்கள், கரூர் பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்ல குவிந்தனர்.
பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்குகிறது. நாளை முதல் வரும், 19 வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்-ளது. இதனால், நேற்று கரூர் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். கரூரில் சாயப்பட்டரை, கொசுவலை நிறுவனம் மற்றும் பஸ் பாடி நிறுவனங்களில், தென் மாவட்டங்-களை சேர்ந்த, தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களும், நேற்று காலை முதல் பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்-பட்டு சென்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.