sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

/

மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்


ADDED : ஜூன் 14, 2025 07:40 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பகுதியில் அரசு அனுமதி இன்றி காற்றாற்று மணல், கிராவல் மண் மற்றும் கனிமங்கள் கடத்தப்படுவதாக டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, வடசேரி தென்னகர் அரியாறு பாலம் அருகே வந்த, டிப்பர் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணம் இல்லாததால் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து டிப்பர் டிராக்டர், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரும், டிரைவருமான கீழ வெளியூர் வேலுசாமி, 40, பொக்லைன் டிரைவர் முருகேசன், 32, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

* குளித்தலை அடுத்த, கோவளம் குச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால், 41, கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் மாயனுார் பழைய போலீஸ் ஸ்டேஷன் வழியாக, டயர் மாட்டு வண்டியில் அரை யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தார். மாயனுார் போலீசார் சோதனை செய்தபோது, உரிய அனுமதியில்லாமல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனபாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us