/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கரூரில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கலாராணி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா அரசு விதித்துள்ள, 50 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மா.கம்யூ., கட்சி எம்.எல்.ஏ., நாகை மாலி, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, தொழிற்சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், ரவி, சந்திர மோகன், பால்ராஜ், ஜீவானந்தம், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.