sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீரகனுாரில் ஆடுக்கு ரூ.100 சுங்கம் வசூல் சந்தையை தெடாவூருக்கு மாற்றிய வியாபாரிகள்

/

வீரகனுாரில் ஆடுக்கு ரூ.100 சுங்கம் வசூல் சந்தையை தெடாவூருக்கு மாற்றிய வியாபாரிகள்

வீரகனுாரில் ஆடுக்கு ரூ.100 சுங்கம் வசூல் சந்தையை தெடாவூருக்கு மாற்றிய வியாபாரிகள்

வீரகனுாரில் ஆடுக்கு ரூ.100 சுங்கம் வசூல் சந்தையை தெடாவூருக்கு மாற்றிய வியாபாரிகள்


ADDED : ஜூன் 22, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுாரில் சனிதோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. அங்கு ஆடுகளுக்கு தலா, 100 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற சந்தைகளில், 50 முதல், 70 ரூபாய் உள்ள நிலையில், வீரகனுாரில் மட்டும், 100 ரூபாய் வசூலிப்பதால், கட்டணத்தை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் கடந்த வார சந்தையின்போதும், 100 ரூபாய் வசூலித்ததால், வியாபாரிகள் வாக்குவாதம் செய்தும் குறைக்கவில்லை.

இதனால் நேற்று முன்தினம் இரவே, தெடாவூர் டவுன் பஞ்சாயத்தில் ஆட்டுச்சந்தை நடத்த இடம் தயார்படுத்தினர். நேற்று காலை தெடாவூரில் சந்தை கூடியது. அங்கு ஒரு மாதத்துக்கு சுங்க கட்டணம் இல்லை என, தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலு தெரிவித்தார். சுற்றுவட்டார விவசாயிகள், 600க்கும் மேற்பட்ட ஆடுகளை, தெடாவூரில் விற்பனைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். வீரகனுாருக்கு யாரும் செல்லாததால், அங்கு சந்தை செயல்படவில்லை. இதனால் வீரகனுார் சந்தையை சுங்கம் எடுத்தவர்கள், வீரகனுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், கலெக்டர் பிருந்தாதேவிக்கு புகார் அனுப்பினர். அதில், 'தெடாவூரில் அனுமதியின்றி சந்தை செயல்படுகிறது. வீரகனுாரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'தெடாவூரில் குறைந்த சுங்க கட்டணத்தில் சந்தை நடத்துவதாக கூறியதால் அங்கு சென்றோம்' என்றனர்.

தெடாவூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலு கூறுகையில், ''இங்கு வருவாய் இனங்கள் இல்லை. 1997 முதல், 2000ம் வரை ஆட்டுச்சந்தை செயல்பட்டது. தற்போது கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். போலீசாரிடம் தடையில்லா சான்று பெற்று வந்த நிலையில், வியாபாரிகள் கோரிக்கைப்படி, சந்தை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு பின், ஆடு - 20, கோழி - 10, மாடு - 40 ரூபாய் என சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us