தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கவிழ்ந்த கன்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கவிழ்ந்த கன்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கவிழ்ந்த கன்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : நவ 16, 2024 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையில் (டி.என்.பி.எல்.,) இருந்து, பேப்பர் பண்டல்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று காலை, 7:00 மணிக்கு துாத்துக்குடி துறைமுகத்-துக்கு புறப்பட்டது. லாரியை துாத்துக்குடியை சேர்ந்த ஜான், 45, என்பவர் ஓட்டினார்.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை காக்காவாடி பகுதியில், கன்-டெய்னர் லாரி சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. அதில், கன்-டெய்னர் லாரி சாலையில், கவிழ்ந்தது. கன்டெய்னர் லாரி டிரைவர் ஜானுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதையடுத்து, கரூர் ரோந்து பணி போலீசார், வாகனங்களை மற்-றொரு பாதையில், செல்லும்படி அறிவுறுத்தினர். 11:00 மணிக்கு பொக்லைன் இயந்திரம் மூலம், கன்டெய்னர் லாரி அகற்றப்பட்-டது. வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us