/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனூர் ரயில்வே கேட்டால் வாகன நெரிசல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
/
மாயனூர் ரயில்வே கேட்டால் வாகன நெரிசல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மாயனூர் ரயில்வே கேட்டால் வாகன நெரிசல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மாயனூர் ரயில்வே கேட்டால் வாகன நெரிசல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 15, 2024 04:01 AM
கரூர்: மாயனுார் ரயில்வே கேட் பகுதியில் நேற்று வாகன நெரிசலால், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி, மாயனுார் கதவணை செல்லும் சாலை வளைவில், ரயில்வே கேட் உள்ளது. மாயனுார் கத வணை பாலம், ரயில்வே கேட் வழியாக கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்ட மக்கள் தின மும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். கரூர் - திருச்சி இருப்பு பாதை வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் அதிகமாக சென்று வருகின்றன. மாயனுார் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், கேட்டின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
இந்த ரயில்வே கேட், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் இருப்பதால், கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும்போது, வாகன நெரிசல் ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையிலும் போக்கு வரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுகின்றன.
மாயனுார் ரயில்வே கேட் அருகில் போக்குவரத்து நெரி சலை தவிர்க்கும் வகையில் மாயனுார் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும். மேலும், நிரந்தர தீர்வாக இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

