/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
/
அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 22, 2025 08:51 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டார தலைந-கரமாகும். இங்கிருந்து சென்னை, நாகூர், ராய-வேலுார், கரூர், திண்டுக்கல், பழனி, தாராபுரம், கோவை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிக-ளுக்கு தினசரி, 100க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், அரவக்குறிச்சி நகர பகுதியில் மணல் லாரி, சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் லாரி, பஸ் என அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஏ.வி.எம்., கார்னர் பகுதி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதில், லாரிகள் அதிகளவில் நுழைவதால், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதி உள்ளிட்ட இடங்க-ளுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள், வேகமாக வரும் லாரி மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, பள்ளி, கல்லுாரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிக வாகனங்கள் சேர்ந்து கொள்வதால் இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது. ஏற்படும்.எனவே, அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும் புறவழிச்சா-லையில் சென்று வர போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

