பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி கூட்டம்
பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி கூட்டம்
ADDED : மார் 13, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் பணியில் ஈடு-பட உள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு ஆகி-யோருக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.
கலெக்டர் ரவிகுமார் தலைமை வகித்தார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவற்றில், தினமும் சுழற்சி முறையில் தலா மூன்று குழுக்கள் வீதம் மொத்தம், 36 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுக்களுக்கு மேற்-கொள்ள வேண்டி பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குளித்தலை சப்-க-லெக்டர் சுவாதிஸ்ரீ, கரூர் ஆர்.டி.ஓ., சுந்தரராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் கலால் முரு-கேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
