ADDED : ஜூலை 03, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த கொம்பாடிப்பட்டி கிராமத்தில், சாலையின் இருபுறமும் நிழல்
தரும் பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மரக்கன்றுகளை
சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அதிகமான வெயில்
அடிப்பதால் நடப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்
நிலை உள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட
தொழிலாளர்களை கொண்டு, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி
நடந்து வருகிறது.
