/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயலுார் பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி மும்முரம்
/
வயலுார் பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி மும்முரம்
வயலுார் பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி மும்முரம்
வயலுார் பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி மும்முரம்
ADDED : ஜன 28, 2025 07:09 AM
கிருஷ்ணராயபுரம்: வயலுார் பஞ்சாயத்து பகுதிகளில், நடப்பட்ட மரக்கன்று பராமரிப்பு பணிகளில் பஞ்சாயத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார் மழை நீர் சேமிப்பு குளம் கரை மற்றும் நடுப்பட்டி, தேவசிங்கப்பட்டி, சரவணபுரம் சாலை ஆகிய பகுதிகளில் பஞ்சாயத்து சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை சுற்றி செடிகள் வளர்ந்ததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மரக்கன்றுகளை சுற்றி வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. மேலும் கால்நடைகளில் இருந்து பாதுகாக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த பணிகளில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

