sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் அவதி

/

சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் அவதி

சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் அவதி

சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் அவதி


ADDED : ஜூலை 12, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார் சுவிட்ச் பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி, பெரிய குளத்துப்பாளையம் பழைய இனாம் கரூர் நகராட்சி அலுவலகம் அருகே, 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வருவோர் வசதிக்காக, மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக குழாயில் குடிநீரும் வருவது இல்லை. மின் மோட்டார் மற்றும் போர்வெல் குழாய்களும் சேதம் அடைந்துள்ளதால், நிலத்தடி நீரையும் பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டாரை இயக்க, அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டுகளும் சேதம் அடைந்துள்ளது.

இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரையும் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, கரூர் மாநகராட்சி நிர்வாகம், பெரிய குளத்துப்பாளையம் பகுதியில், சேதமடைந்த குடிநீர் குழாய், போர்வெல் குழாய்களை உடனடியாக, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us