sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்

/

சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்

சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்

சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்


ADDED : நவ 26, 2025 02:23 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மேற்கு மாவட்ட, த.வெ.க., செயலர் நேற்று மாலை மீண்டும் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்றார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கை, விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், ஆகியோரிடம் நேற்று முன்தினம் காலை முதல், நேற்று மதியம் வரை விசாரணை நடத்தினர். பிறகு, அனைவரும் விசாரணை முடி ந்ததால் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை, 4:30 மணிக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் மட்டும், சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசார கூட்டம் நடத்த, போலீசாரிடம் வழங்கிய அனுமதி கடிதம் குறித்த நகல்களை, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் வழங்கியதாக தெரிகிறது. பிறகு, 6:30 மணிக்கு சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து மதியழகன் புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us