sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருமணத்தில் மொய் பணம் திருடிய இருவருக்கு காப்பு

/

திருமணத்தில் மொய் பணம் திருடிய இருவருக்கு காப்பு

திருமணத்தில் மொய் பணம் திருடிய இருவருக்கு காப்பு

திருமணத்தில் மொய் பணம் திருடிய இருவருக்கு காப்பு


ADDED : ஜன 30, 2026 04:53 AM

Google News

ADDED : ஜன 30, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: திருமண விழாவில், மொய் பணம் திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், திருநாராயணபுரத்தை அடுத்த மேலகாரை காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, 44. இவரது அண்ணன் மகள் திருமணம், நேற்று முன்தினம் குளித்தலை அடுத்த அய்-யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமணத்தின் போது மொய் எழுதினர். அதில், 10 ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன், பணத்தை கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு இருந்தனர். அப்போது, உறவினர்போல் திருமணத்திற்கு வந்த, நான்கு பேரில் இருவர் மொய் எழுதுவது பொல் பேசியும். ஒருவர், 500 ருபாய்க்கு சில்லரை வாங்குவது போல் பேசியுள்-ளனர்.

அதில் இருவர், மொய் பணத்தை திருடிய போது கையும் களவு-மாக சிக்கி கொண்டனர். மற்ற இருவர் அங்கிருந்து தப்பினர்.

இருவரை பிடித்து விசாரித்ததில், தேனி மாவட்டம் சின்னம-னுாரை சேர்ந்த வேல்முருகன், 54, பாண்டியம்மாள், 38, என தெரியவந்தது.

இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், இருவர் மீதும் தலா 3 வழக்குகள் கருர் மாவட்-டத்தில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us