sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் இருவர் பலி

/

பைக் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் இருவர் பலி

பைக் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் இருவர் பலி

பைக் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் இருவர் பலி


ADDED : பிப் 16, 2024 11:44 AM

Google News

ADDED : பிப் 16, 2024 11:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: வரவணை சாலையில், பைக் மீது ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்த இரு மாணவர்கள் பலியாகினர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த காணியாளம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம், வீரப்பூரை சேர்ந்த செபாஸ்டியன் சுபாஷ், 19, மணப்பாறை உடையாப்பட்டியை சேர்ந்த ஜான்சன், 19, கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியை சேர்ந்த அருண்ஜெஸ்டின், 19, ஆகிய மூன்று மாணவர்களும் மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணியளவில் கல்லுாரி முடித்து விட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டி அருண்ஜெஸ்டின் ஹீரோ ேஹாண்டா பைக்கை ஓட்ட, பின்னால் செபாஸ்டியன் சுபாஷ், ஜான்சன் ஆகியோர் அமர்ந்து வரவணை வழியாக தரகம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வரவணை பகுதியில் எதிரே வந்த ஈச்சர் சரக்கு வாகனம், பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் செபாஸ்டியன் சுபாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த இரு மாணவர்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதில் ஜான்சன் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அருண்ஜெஸ்டின் மேல் சிகிச்கைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஈச்சர் சரக்கு வாகன ஓட்டுனர் ஜெகதாபியை சேர்ந்த சரவணன் மீது, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us