sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பக்தர் வேடமிட்டு நகை பறித்த இருவர் சிக்கினர்

/

பக்தர் வேடமிட்டு நகை பறித்த இருவர் சிக்கினர்

பக்தர் வேடமிட்டு நகை பறித்த இருவர் சிக்கினர்

பக்தர் வேடமிட்டு நகை பறித்த இருவர் சிக்கினர்


ADDED : டிச 09, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள தச்சு பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 35; விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்துக்கு சென்று விட்ட நிலையில் மனைவி ரேணுகா, 29, வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது ஐயப்ப பக்தர்கள் போல் மாலை அணிந்து டூவீலரில் இருவர் வந்துள்ளனர். பூஜை செய்ய நன்கொடை கேட்டுள்ளனர். வீட்டுக்குள் சென்று பணம் எடுத்து வந்த ரேணுகா முகத்தில் பொடியை துாவி, அரை பவுன் கம்மலை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவிலிபாளையம் பகுதியில் மொபட்டில், மாலை அணிந்து வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். டி.ஜி.புதுாரை சேர்ந்த மோகன், 42, மூர்த்தி, 41, என தெரிந்தது. இருவரும் ரேணுகாவிடம் கம்மலை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார் நகையை கைப்பற்றினர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us