/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
/
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
ADDED : ஏப் 28, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், தான்தோன்றிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், 19, என்பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், கரூர்-வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில், கஞ்சா வைத்திருந்ததாக வெங்கமேடு பகுதியை சேர்ந்த லட்சுமணன், 40, என்பவரை, கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.