/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் பலி
/
மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் பலி
ADDED : டிச 28, 2024 02:00 AM
குளித்தலை: குளித்தலை அருகே, மின்சாரம் பாய்ந்து இரு ஆடுகள் பலியா-யின.
குளித்தலை அடுத்த,  இனுங்கூர் பஞ்., தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி பார்வதி, 50, கூலி தொழி-லாளி.
இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தான் வளர்த்து வரும் ஆடுகளை, இனுங்கூர் கட்டளை மேட்டு வாய்க்கால் கரை-யோரம் தினமும் மேய்த்து வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை  மேய்த்து கொண்டிருந்தபோது, கரையின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மின்வேலி அருகே, மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகள் மீது எதிர்பாராத வித-மாக மின்சாரம் பாய்ந்தது. அப்போது ஆடுகளை காப்பாற்ற சென்ற பார்வதி மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், அவ்வழியாக வந்-தவர்கள் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்தனர்.
ஆனால் இரண்டு ஆடுகளும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தன. மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட பார்வதி, இனுங்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சிகிச்சை பெற்று, வீட்டுக்கு திரும்பினார்.

