ADDED : ஏப் 28, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:பவானி, வர்ணபுரத்தை சேர்ந்தவர் வீரகுமார், 42; கட்டுமான தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் அருகே, தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரை நிறுத்திவிட்டு, கட்டட வேலை செய்து கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில், டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
