/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே டூவீலர் மீது கார்கள் மோதியதில் வாலிபர் பலி
/
அரவக்குறிச்சி அருகே டூவீலர் மீது கார்கள் மோதியதில் வாலிபர் பலி
அரவக்குறிச்சி அருகே டூவீலர் மீது கார்கள் மோதியதில் வாலிபர் பலி
அரவக்குறிச்சி அருகே டூவீலர் மீது கார்கள் மோதியதில் வாலிபர் பலி
ADDED : அக் 10, 2024 03:26 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே தேரப்பாடியில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள், டூவீலர் மீது மோதியதில் ஒருவர் பலி-யானார்.
அரவக்குறிச்சி அடுத்த நாகம்பள்ளி அருகே வாந்தம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 40. இவரது மனைவி சுமதி, 37. இருவரும், திண்டுக்கல் - கரூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். தேரப்பாடி பிரிவு ஆர்ச் அருகே சென்றபோது, இதே திசையில் தென்காசி மாவட்டம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த கணேஷ், 31, என்பவர் ஒட்டி வந்த கார், இவருக்கு முன்னால் சென்ற மேல பசுபதிபாளையத்தை சேர்ந்த முருகேசன், 46, என்பவர் ஓட்டி சென்ற கார் மீது மோதியது.அடுத்தடுத்த மோதிய கார்கள், ஈஸ்-வரன் ஒட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தி-லேயே உயிரிழந்தார். இவரது மனைவி சுமதி பலத்த காயம-டைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.