/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பராமரிப்பு இல்லாத கழிப்பிடம் மணவாசி டோல்கேட்டில் அவலம்
/
பராமரிப்பு இல்லாத கழிப்பிடம் மணவாசி டோல்கேட்டில் அவலம்
பராமரிப்பு இல்லாத கழிப்பிடம் மணவாசி டோல்கேட்டில் அவலம்
பராமரிப்பு இல்லாத கழிப்பிடம் மணவாசி டோல்கேட்டில் அவலம்
ADDED : ஜன 08, 2024 11:35 AM
கரூர்: கரூர் அருகே, டோல்கேட்டில் கழிப்பிடம் பூட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மணவாசியில் டோல்கேட் உள்ளது. அதன் வழியாக செல்லும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கரூர் - திருச்சி சாலை, திருச்சி - கரூர் சாலையில், டோல்கேட்டையொட்டி, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், கழிப்பிடங்களை நாள்தோறும் டோல்கேட் ஊழியர்கள் சுத்தம் செய்வது இல்லை. இதனால், தொற்று நோய் பரப்பும் மையங்களில் மணவாசி டோல்கேட் கழிப்பிடங்கள் உள்ளன. குறிப்பாக, கரூர் - திருச்சி சாலையில் உள்ள கழிப்பிடம், பெரும்பாலும் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது.
இதனால், அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சாலையை கடந்து, எதிர் திசையில் உள்ள கழிப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டால், அவர்கள் மிரட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உள்ள, இரண்டு காபி பார்களிலும், உணவு பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்
படுகிறது.
எனவே, மணவாசி டோல்கேட்டில் உள்ள கழிப்பிடங்களை நாள்தோறும் திறந்து வைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.