ADDED : ஏப் 14, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, நாம் தமிழர் கட்சி சார்பில், மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் நன்மாறன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
வக்ப் வாரிய திருத்த சட்டத்தை அமல்படுத்திய, மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்மகன் நாகராசு, மருத்துவ அணி நிர்வாகி கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.

