/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோர இறைச்சி கடைக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
/
சாலையோர இறைச்சி கடைக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
சாலையோர இறைச்சி கடைக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
சாலையோர இறைச்சி கடைக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2025 05:51 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில், நுாற்-றுக்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த இறைச்சி கடைகளில் மீத-மாகும் கழிவுகளை, ஒருசில கடைக்காரர்கள் அப்-புறப்படுத்தி
விடுகின்றனர்.
இதில் ஒரு சிலர், தெருநாய்கள் உண்பதற்காக சாலையிலேயே வீசி விடுகின்றனர். இதை தின்னும் தெரு நாய்களுக்கு வெறிபிடித்து, சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தை-களை அச்சுறுத்தி வருகிறது. அரவக்குறிச்சி பகு-தியில் ஒவ்வொரு தெருக்களிலும், பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் பொதுமக்களை அச்சு-றுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. இதே-போல பள்ளப்பட்டி பகுதியில் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை தொடர்ந்து கடித்து குதறி
வருகின்றன.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்-காமல் இருக்க, இறைச்சி கடைகளை ஓரிடத்தில் அமைத்து அதன் கழிவுகளை குப்பை கிடங்கு-களில் அப்புறப்படுத்த வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல உத்தரவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.