/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைக்க வலியுறுத்தல்
/
ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 01:47 AM
அரவக்குறிச்சி, அடிப்படை வசதி இல்லாத, ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி அடுத்த ஈசநத்தத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுகிறது. இதில் கடை போட, 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமானோர் இங்கு வந்து காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் சந்தை வளாகத்தில் இடப்பற்றாக்குறை, குடிநீர், மின்சாரம், கடை அமைக்கும் மேடை, கழிவறை என எந்த அடிப்படை வசதியும் இல்லை.
இதனால் மக்கள், வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். சந்தைக்கு இடம் ஒதுக்கியோ அல்லது தற்போது செயல்பட்டு வரும் சண்டையை விரிவாக்கம் செய்யவோ தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.