ADDED : ஏப் 25, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:
உலக கால்நடை தினத்தை முன்னிட்டு நாளை காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, எலந்தகுட்டை கால்நடை மருந்தகத்தில், நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தங்களுடைய நாய்களை கொண்டு வந்து, வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு, நோயை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, எலந்தகுட்டை அரசு கால்நடை மருந்தக உதவி மருத்துவர் தெரிவித்துள்ளார்.

