sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வடை மாஸ்டர் கைது

/

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வடை மாஸ்டர் கைது

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வடை மாஸ்டர் கைது

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வடை மாஸ்டர் கைது


ADDED : ஜூன் 02, 2025 04:11 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி அருகே, மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற, வடை மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி, செல்வகுமார் மண்டப சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 45; வடை மாஸ்டர். இவரது மனைவி அம்சா, 32; மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த தொழிலாளி சிவக்குமார், 35; க.பரமத்தியில் உள்ள கல்குவாரியில் வேலைக்கு வந்தபோது, அம்சாவுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் ஐந்து ஆண்டுகளாக தொடர்பில் இருந்தனர். ரமேஷ் பலமுறை எச்சரித்தும், இருவரும் கைவிடவில்லை.ரமேஷ் கரூரில் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது அம்சாவும், சிவக்குமாரும் வீட்டில் இருந்தனர்.

அதிர்ச்சியடைந்த ரமேஷ் இரும்பு கம்பியால் தலையில் அடித்ததில் சிவக்குமார் சம்பவ இடத்தில் பலியானார். க.பரமத்தி போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடை மாஸ்டர் ரமேசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us