/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிவேகத்தில் வந்தே பாரத் ரயில்: மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு
/
அதிவேகத்தில் வந்தே பாரத் ரயில்: மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு
அதிவேகத்தில் வந்தே பாரத் ரயில்: மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு
அதிவேகத்தில் வந்தே பாரத் ரயில்: மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 30, 2024 06:35 AM
கரூர்: அதி வேகத்தில் வந்தே பாரத் ரயில் செல்வதால், சேலம் ரயில்வே இருப்பு பாதை வழியில், பெரிய குளத்துப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் அருகே, வெங்கமேடு -பெரிய குளத்துப்பாளையம் இடையே, சேலம்--கரூர் ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு கடந்த, 2013 முதல் ரயில்வே போக்குவரத்து நடந்து வருகிறது. கரூர்-சேலம் இடையே நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த செப்., 2 முதல் மதுரையில் இருந்து, கரூர் வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் அதி வேகத்தில் இயக்கப்படுகிறது.இதனால், ரயில்கள் செல்லும் போது, பெரிய குளத்துப்பாளையத்தில் உள்ள கேட் மூடப்படுகிறது. அந்த சமயத்தில், பெரிய குளத்துப்பாளையத்தில் இருந்து, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கரூர் அருகே பெரியகுளத்துப்பாளையம், சின்ன குளத்துப்பாளையம் பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சிறிய குகை வழிப் பாதை மட்டும் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கரூர்-சேலம் ரயில்வே வழித் தடம் முக்கிய பாதையாக மாறி வருகிறது. தற்போது, வந்தே பாரத் ரயில் செல்கிறது. மேலும் அதிக ரயில்கள் செல்ல வாய்ப்புள்ளது.
தற்போது, மின் பாதை அமைக்கப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். எனவே பெரிய குளத்துப்பாளையத்தில், கரூர்-சேலம் ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.