sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

/

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்


ADDED : செப் 23, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை :குளித்தலையில், போலீசார் வாகன சோதனையில், கடத்தப்பட்ட ஒன்றே கால் டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, குளித்தலை உழவர் சந்தை புறவழிச் சாலையில், வேகமாக வந்த டாடா ஏசி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளை, சாக்கு படுதாவால் மூடியபடி கடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக, பஞ்சப்பட்டியை சேர்ந்த கந்தசாமி, 53, என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றே கால் டன் ரேஷன் அரிசியுடன், சரக்கு வாகனத்தை குளித்தலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குளித்தலை, தோகைமலை பகுதியில் உள்ள ரேஷன் அரிசியை, கோழி பண்ணைகளுக்கும், அரிசி ஆலைகளுக்கும் கடத்துகின்றனர். மேலும் சிலர், ரேஷன் அரிசியை துாய்மைப்படுத்தி, பின்னர் பொதுமக்களுக்கு புதிய சாக்கு பையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிய வருகிறது. குளித்தலை பகுதியில் தொடர்ந்து நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us