sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி

/

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி


ADDED : நவ 05, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கரூர் மாவட்டம் சார்பில் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், குழந்தை திருமணம் செய்து கொள்வதால், உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்.

மேலும் குடும்ப அனுபவம் ஏதும் அறியாமல் மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார். குழந்தை திருமணம் நடத்த முன்வரும் குழந்தையின் பெற்றோர், திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தார் மற்றும் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யும் அர்ச்சகர், பூசாரி, மேளம் அடிப்பவர்கள், திருமண மண்டபம் வாடகைக்கு கொடுப்பவர் ஆகியோர் மீது, காவல்துறை மூலம் வழக்கு பதியப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரும் சிறை செல்வர்.

குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், 1090 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் சினிமா பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கலை நிகழ்ச்சியை லாலாப்பேட்டை ஸ்ரீதர் கலைக்குழுவினர் நடத்தினர்.

இதேபோல் தோகைமலை பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களிலும், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.






      Dinamalar
      Follow us