sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒட்டப்பட்டிக்கு பஸ் இயக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

/

ஒட்டப்பட்டிக்கு பஸ் இயக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ஒட்டப்பட்டிக்கு பஸ் இயக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ஒட்டப்பட்டிக்கு பஸ் இயக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


ADDED : மே 13, 2025 01:24 AM

Google News

ADDED : மே 13, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :ஒட்டப்பட்டி வழியாக பஸ் இயக்க வேண்டும் என, மக்கள் குறைதீர் கூட்டத்தில், கரூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கடவூர் ஊராட்சி ஒன்றியம், கொசூர் அருகில் ஒட்டப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் பஸ் வசதியில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, கூலி வேலைகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

காலை, மாலை பஸ் வசதியில்லாமல் பல கி.மீ., துாரம் நடந்து சென்று, பின் பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது. கொசூரில் இருந்து காலை, 7:30 மணிக்கு ஒட்டப்பட்டி வழியாக கரூருக்கு பஸ் இயக்க வேண்டும். அதேபோல் மாலை, 4.00 மணிக்கு கரூரிலிருந்து பஸ் இயக்க வேண்டும். அப்போது தான் மாணவ, மாணவியர், பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us