/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு
/
பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு
பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு
பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு
ADDED : நவ 12, 2024 07:02 AM
கரூர்: கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்.,க்குட்பட்ட பொன் நகரில் சர்ச் கட்ட அனுமதி வழங்க கூடாது என, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் அருகில், காதப்பாறை பஞ்.,க்குட்பட்ட பொன் நகரில் வீட்டு மனைகள் பிரித்துள்ளனர். அதில் ஒரு மனை வாங்கப்பட்டு, சர்ச் கட்டுமான பணி தொடங்-கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இப்பகுதியில், இந்துகள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படக் கூடும். எனவே, சர்ச் கட்ட அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.