அரவக்குறிச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 26, 2026 01:23 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வருவாய் துறை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதல் முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
முன்னதாக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், முக்கிய வீதிகள் வழியாக அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் வாக்களிப்பதின் அவசியம் குறித்து, கையில் பதா-தைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கல்லுாரியில் பயிலும், 18 வயதுக்கு மேற்பட்ட முதல் முறை வாக்காளர்க-ளுக்கு, வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்-டது.கடந்த ஒரு வாரமாக கல்லுாரியில், தேர்தல் குறித்த பேச்சுப்-போட்டி, கோலப்போட்டி, பட்டிமன்றம், கட்டுரை போட்டி உள்-ளிட்டவை நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த நிகழ்வில் அரவக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
