/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., சார்பில் நடைபயணம்
/
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., சார்பில் நடைபயணம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., சார்பில் நடைபயணம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., சார்பில் நடைபயணம்
ADDED : அக் 03, 2024 07:25 AM
கரூர்: கரூரில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., சார்பில் நடைபயணம் மேற்கொண்டனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்-டானாவிலிருந்து, காந்தி ஜெயந்தியை முன்-னிட்டு காங்., சார்பில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது. மாநகர தலைவர் வெங்க-டேஸ்வரன் தலைமை வகித்தார். மத நல்லி-ணக்கத்தை வலியுறுத்தியும், வெறுப்பு அரசிய-லுக்கு எதிராகவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்-படுத்தும் வகையில் நடை பயணம் மேற்கொள்-ளப்பட்டது.
பின்னர், முன்னாள் முதல்வர் காம-ராஜர் சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தொடங்கிய நடைபயணம், ஜவகர் பஜார் வழியாக சென்று, கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, மாநகர துணை தலைவர் கண்ணப்பன் உள்-பட பலர் பங்கேற்றனர்.* கரூர் லாலாபேட்டை உள்ள காந்தி சிலைக்கு, கிசான் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர், பேங்க் சுப்ரமணியன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவரு-டைய படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்-டது. அப்போது, காங்., ஓ.பி.சி அணி மாநில பொது செயலாளர் தட்சிணா மூர்த்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்பட உடனிருந்தனர்.* கரூரில் உள்ள காந்திசிலைக்கு, மாவட்ட சுதந்-திரப் போராட்ட வீரர்கள் வாரிசு சங்கம் தலைவர் அவனாசிலிங்கம், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர்.