/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 05, 2026 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 10,404 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 10,653 கன அடி-யாக அதிகரித்தது. அதில், 10,133 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது.
நான்கு பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து நொய்யல் பாசன வாய்க்-காலில் வினாடிக்கு, 18 கன அடி தண்ணீர் திறக்-கப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 25.75 அடியாக இருந்தது.

