sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

/

பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜன 23, 2025 06:23 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், பெய்த மழை காரணமாக, பெரிய ஆண்-டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கடந்த, 18 முதல், 20 வரை கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிக-ளான அரவக்குறிச்சி, க.பரமத்தி வட்டாரங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த, 20ல் வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 686 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 180 கன அடியாக இருந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 50 கன அடி தண்ணீர் வினாடிக்கு, 6 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 83.47 அடியாக இருந்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,159 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 4,509 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.25 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us