sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நின்ற தண்ணீர் வரத்து

/

கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நின்ற தண்ணீர் வரத்து

கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நின்ற தண்ணீர் வரத்து

கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நின்ற தண்ணீர் வரத்து


ADDED : ஜூலை 14, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்-டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நின்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, கடந்த ஜூன் மாதம், முதல் முறை வைத்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 432 கன அடியாக உள்-ளது.

இதனால், அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கும், தண்ணீர் வரத்து நின்றதால், தடுப்பணை பகுதியில், பாறைகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அம-ராவதி அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 88.03 அடியாக இருந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 154 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மாயனுார் கதவணை

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 27,849 கன அடியாக இருந்-தது. அதில், 26,379 கன அடி தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், திறக்-கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.80 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us