sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோடை காலம் துவங்கியதால் கரூரில் இளநீர் விலை உயர்வு

/

கோடை காலம் துவங்கியதால் கரூரில் இளநீர் விலை உயர்வு

கோடை காலம் துவங்கியதால் கரூரில் இளநீர் விலை உயர்வு

கோடை காலம் துவங்கியதால் கரூரில் இளநீர் விலை உயர்வு


ADDED : மார் 05, 2025 07:15 AM

Google News

ADDED : மார் 05, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கோடை காலம் துவங்கியதையொட்டி, கரூரில் இளநீர் வரத்து குறைந்து, ஜெட் வேகத்தில் விலை உயர்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகள் மற்றும் அமராவதி ஆற்று கரையோர பகுதிகளில் தென்னை விவசாயம் நடக்கிறது. 2022, 2023ல், கரூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், ஏராளமான தென்னை மரங்களில், காய்களின் உற்பத்தி குறைந்தது. கடந்தாண்டு, கரூர் மாவட்டத்தில் மழை பெய்தாலும், தென்னை மரங்களில் எதிர்பார்த்த இளநீர் வரத்து இல்லை. இதனால், இளநீர் சாகுபடி குறைந்தது.

கரூர் மாவட்ட இளநீர் தேவைக்கு, திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைபேட்டை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதம், 30 ரூபாய் வரை விற்ற ஒரு இளநீர் நேற்று, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 60 சதவீதம் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு சென்று இளநீரை கொள்முதல் செய்து, கொண்டு வருகிறோம். போக்குவரத்து செலவு, கோடை காலத்தில் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், இளநீர் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us