sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

/

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : மார் 03, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில், வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளில், நெல் அறுவடை தொடங்கிய நிலையில் வினாடிக்கு, 250 கன அடியாக, நேற்று காலை அதிகரிக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 57.76 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 57 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில், 3 மி.மீ., மழை பெய்தது.

மாயனுார் கதவணை: கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 90 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.ஆத்துப்பாளையம்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 10.82 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us